Tuesday 1 September 2015

சமையலில் செய்ய கூடாதவை

சமையலில் செய்ய கூடாதவை:

இல்லத்தரசிகளே!... சமையலில் செய்யக்கூடாத சில காரியங்கள்....
சமையலில் செய்யக்கூடாதவை...!!


* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.


* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.


* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.


* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.


* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.


* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.


* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.


* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.


* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.


* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.


* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.


* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


No comments:

Post a Comment